சிட்டுக்குருவிகளின் காவலன்

இவர் பெயர் பாண்டியராஜன், இவர் கோயம்புத்தூர் போத்தனூரில் வசிக்கிறார், இவர் தனது நண்பர்களுடன் இனைந்து  "சிட்டுக்குருவி காப்பு இயக்கம்" என்ற அமைப்பை நடத்தி வருகிறார், இந்த அமைப்பில் 15 பேர் வரை இருக்கிறார்கள் இந்த அமைப்பின் மூலம் அழிந்து வரும் இனமான சிட்டுக்குருவிகளை காக்க முயன்று வருகிறார்கள். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சொந்த செலவிலேயே தங்கள் லேத்திலேயே சிறு துளையுடன் கூடிய, குருவிகள் கூடு கட்டி வசிக்கும் அளவிற்கு சிறிய சிறிய மரபெட்டிகள் செய்து அதை அந்த ஊரில் சுற்றியிருக்கும் கடைகளின் மேல்புறத்திலும், வீடுகளிலும் (உரிமையாளர் அனுமதியுடன்) பொருத்தி வருகிறார்கள்.
இதன் மூலம் கூடு கட்ட இடமின்றி தவிக்கும் சிட்டு குருவிகளுக்கு கூடு அமைத்து கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுகிறார்கள். இதனால்
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

அவர்கள் ஆங்காங்கே வைத்துள்ள பெட்டிகளில் சிட்டுக்குருவிகள் வருவதும் போவதுமாய் இருப்பதை  நானும் கண்டேன்

அவர்களின் பணி சிறப்புற நமது "Local Paper" சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம்

உண்மையாகவே குருவிகள் வளர்க்கும் ஆர்வம் இருக்கும் அன்பர்கள் பெட்டிகள் தொடர்பாக இவரை தொடர்பு கொள்ள : 994385090

No comments:

Post a Comment