
ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் நாளடைவுல இவங்க செய்றத கேள்விப்பட்டு நிறைய நல்ல உள்ளங்கள் உதவுறனால இன்னைக்கு வரைக்கும் இதை கைவிடாம செஞ்சுட்டு இருக்காங்க
காலைல பாட்டிம்மா வருகைக்காக அங்க, ஏழை எளியவர்கள், வயதானவர்கள், இயலாதவர்கள், யாசகர்கள் னு எல்லோரும் காத்துகிட்டு இருகாங்க, பாட்டிம்மாவை கண்ட உடன் அவர்கள் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது, அதைவிட அவர்கள் பசியாறிய பிறகு அடையும் மகிழ்ச்சியும் மிக பெரியது
ஒரு பந்தி முடிந்த உடன் அடுத்த பந்தி ஆரம்பிகிறது இப்படியாக நான்கைந்து பந்திகள் வரை நடக்கிறது ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 60 பேர் வரை சாப்பிடுகிறார்கள்
என்னதான் நிறைய பேரு உதவுனாலும் அதை எடுத்து செய்ய ஒரு மனசு வேணும் இல்லையா அது இந்த பாட்டிம்மா கிட்ட நிறையவே இருக்கு
மனசார வாழ்த்துவோம் பாட்டிம்மாவ...
இந்த சேவையை எப்போ ஆரம்பிச்சாங்க, எப்படி ஆரம்பிச்சாங்க என்பதை அறிய....காணுங்கள் வீடியோ பதிவை....
No comments:
Post a Comment